நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது – முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்
நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது - மம்தா பானர்ஜி
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி,
நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் தேசிய பணமாக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில்,
திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு கடும் எ...
