“வரிசி” சொல்வது என்ன? கோடங்கி விமர்சனம்
கார்த்திக் மற்றும் சப்னா சின்ன வயது முதல் காதலர்கள். சொந்த வீடு கட்டினால் தான் திருமணம் என்பது சப்னாவின் கனவு. அவர் வேலை செய்யும் ஐடி கம்பெனியிலிருந்து கால் டாக்சியில் தினமும் வீட்டிற்கு வருகிறார். அதே சூழலில் சில இடங்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. வழக்கம்போல சப்னா வேலை முடிந்து வரும்போது காரில் கால்டாக்சி டிரைவரால் கடத்தப்படுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சப்னாவை தேடி அலைகின்றனர். இறுதியில் சப்னாவை கண்டுபிடித்தார்களா? கால் டாக்சி டிரைவர் என்ன ஆனார்? போலீஸ் கடைசியில் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை.
இயக்குனர் கார்த்திக் தாஸ் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்து கதை எழுதி இருந்தாலும் அதை இன்னமும் மெருகேற்றி திரைக்கதையில் மேக்கிங்கில் கவனம் செலுத்தி இ...
