உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினியின் 2.0 படம் 500 கோடியை தாண்டியதாம்..!
லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக வெளியாக ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
உலகளவிலான பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இணைந்த இந்திய திரைப்படமான ‘2.0’, 12வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அமீர்கான் நடித்த ’தூம் 3’ படத்திற்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் ...