திங்கட்கிழமை, ஜூன் 22
Shadow

Author: Kodanki

ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..!

ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..!

செய்திகள்
ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..! தமிழ்திரையுலகில் படங்களின் ரிலீஸ் என்றால் அது வெள்ளிக்கிழமைகளில்தான் நடக்கும். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தால் அதற்கு ஒரு நாள் முன்னதாக படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆனால், தமிழ் சினிமாவில் இப்போதைய நிலையில் கதை நன்றாக இல்லாமல் போனால் ரிலீஸ் ஆன சில தினங்களில் தியேட்டருக்கு கூட்டம் குறைந்து விடுகிறது. இதனால் வசூல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், பிரமாண்ட பேனரில், பெரிய ஹீரோக்கள் படங்களாக இருந்தாலும் ஓப்பனிங் கலெக்ஷன் முடிந்து மறுவாரம் தொடங்கும்போது வசூல் குறைவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், ஓப்பனிங் வசூலை எடுப்பதற்காக வழக்கமாக புதுப்படங்களை வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் செய்யும் தமிழ் திரையுலகம் கடந்த சில வாரங்களாக ஒரு நாள் முன்னதாகவே அதாவது வியாழக்கிழமையே படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறது...
தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது-  சாயா பட நாயகி காயத்ரி!

தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- சாயா பட நாயகி காயத்ரி!

செய்திகள்
தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- கலவரத்தைக் கிளப்புகிறார் சாயா பட நாயகி காயத்ரி! பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்... பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்- இயக்குநர் வி எஸ் பழனிவேல் சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது. கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த  வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு. பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது ’சாயா.’ பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம்...
லண்டனில் பிரிமியர்   22 ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் டிஜிட்டல் பாட்ஷா!

லண்டனில் பிரிமியர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டல் பாட்ஷா!

செய்திகள்
ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றிப் படமான பாட்ஷா படம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்தம் புதிதாக வெளியாகவிருக்கிறது. அண்மையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சத்யம் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக போட்டுக் காண்பித்தார்கள். படம் பார்த்த அத்தனைப் பேரும், ஏதோ புதிய ரஜினி படம் ஒன்றைப் பார்த்த திருப்தியில் ஆடித் தீர்த்தார்கள் இப்போது படத்தை உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் லண்டனில் வரும் பிப்ரவரி 17-ம் தேதி சிறப்புக் காட்சி ஒன்றைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். அந்தக் காட்சி முடிந்ததும் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் பாட்ஷா மறு வெளியீடு செய்யப்படுகிறது....
நான் போயஸ்கார்டன் செல்வது உங்கள் கைகளில் உள்ளது: தொண்டர்கள் மத்தியில் தீபா பரபரப்பு பேச்சு

நான் போயஸ்கார்டன் செல்வது உங்கள் கைகளில் உள்ளது: தொண்டர்கள் மத்தியில் தீபா பரபரப்பு பேச்சு

செய்திகள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சி தொண்டர்கள், முன்னாள் நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தி வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் தீபா வீட்டுக்கு தினமும் வருகிறார்கள். வீட்டின் முன்பு திரளும் தொண்டர்கள் மத்தியில் தீபாவும் பேசுகிறார். நேற்று கோவை, திருச்சி, தூத்துக்குடி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தீபாவை சந்தித்து பேசினார்கள். எனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி. சிலர் வேண்டும் என்றே வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம். வதந்திகளுக்கு நீங்களே முற்றுப்புள்ளி வையுங்கள். என்னை நம்பி வருபவர்களை கைவிட மாட்டேன். மக்களால் நான், மக்கள...