ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21
Shadow

Author: Kodanki

சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்ட  “எஸ்-3“ – இயக்குனர் ஹரி

சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்ட “எஸ்-3“ – இயக்குனர் ஹரி

செய்திகள்
சிங்கம் படத்தின் 3-வது பாகம் “எஸ்-3“ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள இந்த படத்தில் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடித்து உள்ளனர். புதிதாக சுருதிஹாசன், சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க ஆந்திர மாநிலத்தை சுற்றி நடக்கக்கூடிய கதையை வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இந்தி சினிமாவில் இருந்து புதிய வில்லன்கள் நடித்துள்ளனர். படத்தின் சில காட்சிகள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் எடுக்கப்பட்டு உள்ளன. “எஸ்-3“ படம் வருகிற 26-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் 7 விமான நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. மேலும் 8 வகையான விமானங்களை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சம...
மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை வரலாறு படமாகிறது: ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்

மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை வரலாறு படமாகிறது: ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்

செய்திகள்
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். அவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி அசத்தினார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். இதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை சேகரித்து பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் மாரியப்பன் தங்கவேலு கதாபாத்திரத்தில் நடிகர் தேர்வு நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் உருவாகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜூமுருகன் வசனம் எழுதுகிறார். இந்த படத்துக்கு ‘மாரியப்பன்’ என்று பெயர் சூட்டிய...
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு

சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ் சினிமா தயாரிப்பு தொடர்பான பல சங்கங்களை சேர்ந்த ’இன்டோ சினி அப்ரிசிசேஷன்’ என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழாவை சென்னை நகரில் நடத்தி வருகிறது. அவ்வகையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 5 முதல் 12 வரை ஒருவார காலத்துக்கு இந்த விழா ந...
பெப்பர்ஸ் டிவியில் டயல் பண்ணு… சிரி கண்ணு…

பெப்பர்ஸ் டிவியில் டயல் பண்ணு… சிரி கண்ணு…

செய்திகள், முன்னோட்டம்
உங்கள் பெப்பர்ஸ் டிவியில் உங்களை மகிழ்விக்க இளமையான, புதுமையான, கலகலப்பான காமெடி நிகழ்ச்சி “டயல் பண்ணு... சிரி கண்ணு” இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டயல் பண்ணி எங்களோடு ஜாலியாக , கேலியாக பேசலாம், கலாக்கலாம், ஜோக் சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை அசார்ம் ஜீவிதா தொகுத்து வழங்குகிறார்கள். இவர்கள் அரட்டை அடித்து பிரண்ட்லியாக நேயர்களிடம் பேசுவது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கைழமைகளில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். நீங்களும் டயல் பண்ணி பேசலாம், சிரித்து மகிழலாம்....
மோ விமர்சனம்

மோ விமர்சனம்

விமர்சனம்
நாயகன் சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் இணைந்து நூதனமான முறையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முனிஸ்காந்தை வைத்து பேய் போல் மேக்கப் போட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உலவ விடுகின்றனர். பின்னர், அங்கு பேய் இருப்பதாகவும் அதை விரட்டுவதாகவும் கூறி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செகரட்டரியான செல்வாவை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள். ஒருகட்டத்தில் சுரேஷ் ரவி மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் நாடகம் செல்வாவுக்கு தெரிய வருகிறது. இதனால், அவர் இவர்களை போலீசில் மாட்டிவிடப் போவதாக கூற, அவர்களோ பயந்து நடுங்குகிறார்கள். அவர்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வா, தனக்கு தொழில்முறை போட்டியாளராக இருக்கும் மைம் கோபி வாங்கவிருக்கும் பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பதாக கூறி, அந்த ப...
மியாவ் விமர்சனம்

மியாவ் விமர்சனம்

விமர்சனம்
ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரியை இவர்கள் கிண்டல் செய்ய, அவள் நண்பர்களில் ஒருவரை அடித்து விடுகிறாள். இதனால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊர்மிளாவை பழிவாங்க துடிக்கிறார்கள். அன்றிலிருந்து நண்பர்களில் ஒருவன் திடீரென கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஒரு பூனை என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்கள். ஆனால், கொல்லப்பட்டவனின் நண்பர்களோ இதற்கு ஊர்மிளாதான் காரணம் என்று அவள்மீது பழியை போடுகிறார்கள். இந்த கொலை விசாரணை போல...
துருவங்கள் 16 விமர்சனம்

துருவங்கள் 16 விமர்சனம்

விமர்சனம்
ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது. துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா? என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார். இறுதியில், இ...
ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சினி நிகழ்வுகள், செய்திகள்
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார். நேற்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள். பின்னர் அவர், நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்த...