செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

நேர்முகம் விமர்சனம்

நேர்முகம் விமர்சனம்

விமர்சனம்
சிறு வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளான ஆதித்யா மேனன், ஒரு மனோதத்துவ மருத்துவர். இவர் சொந்தமாக கிளினிக் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் இளம் ஜோடிகளை இவர் பல நாள் அடித்து உதைத்து, அவர்களை பலவிதங்களில் பயமுறுத்தி பிரித்து அனுப்புகிறார். இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார...

தங்கல் – திரை விமர்சனம்

விமர்சனம்
அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும் அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் அடுத்த நிலையை எட்ட முடியாமல் போகிறது. எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும் மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான். இந்நிலையில், ஒருநாள் அவரது குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அதை பார்க்கும் அமீர்கான், பெண...

60-வது பிறந்தநாள் : பிரபுவை வாழ்த்திய ரஜினி

சினி நிகழ்வுகள்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், நடிகருமான பிரபுவுக்கு வருகிற டிசம்பர் 27-ந் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவருக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி இன்று பிரபுவை அவரது அன்னை இல்லத்தில் ரஜினி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ரஜினி நேரில் வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பின் போது, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர். ரஜினியும் பிரபுவும் ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சினிமாவையும் தாண்டி, ரஜினியும், பிரபுவும் நிஜ வாழ்க்கையிலும் உடன்பிறவா சகோதரர்களாக இருந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், தன்னுடைய பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிர...

விக்ரம் ஜோடி பிரேமம் நாயகி

செய்திகள்
‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் ‘வாலு’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது, இப்படத்தின் நாயகியாக ‘பிரேமம்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருந்ததாக வெளிவந்த செய்திக்கு படக்குழுவினர் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருவதாகவும், இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறியிருந்தனர். தற்போது, சாய் பல்லவியையே இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது. ‘பீமா’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் கேங்ஸ்டர் படம் இது என்பது குறிப...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

செய்திகள்
  இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹிந்தி  நடிகர் சல்மான் கான் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இருவருக்கும் சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா!

சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா!

சினி நிகழ்வுகள், செய்திகள்
சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா! “அப்பா” படத்திற்கு பின் சமுத்திரக்கனி தயாரித்து, இயக்கி நடிக்கும் படம், “தொண்டன்”. தொண்டன் படத்தில் சமுத்திரக்கனி, விக்ராந்த் உடன் சௌந்தரராஜாவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சசிகுமார் நடித்து, அவரது பட்டறையில் இருந்து வந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த, சுந்தரபாண்டியன் படம் தான், சௌந்தரராஜாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. மீண்டும் தன்னுடைய தாய் குடும்பத்தின் வழிகாட்டியாகவும் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளியாகவும் இருக்கிற இயக்குநர் சமுத்திரக்கனி படத்தில் நடிப்பது, தமிழ் சினிமாவில் தனக்கு நல்ல பெயரோடு இன்னும் பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார், சௌந்தரராஜா.   Actor Soundararaja in Director Samuthirakani’s next! After the movie “APPA”, Director Samuthirakani, is all set to p...
ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் நடிகர் விஷால் பேச்சு

ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் நடிகர் விஷால் பேச்சு

சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும்                                         நடிகர் விஷால் பேச்சு ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது  விஷால் நடிக்கும்    கத்திசண்டை படத்தை  தயாரித்து வருகிறார். படம் வருகிற 23 ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதாவது... முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆடோக...
டாப்சி’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மன்சூர் அலிகான்

டாப்சி’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மன்சூர் அலிகான்

சினி நிகழ்வுகள், செய்திகள்
‘பெப்சி’ அமைப்புக்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன்பு மன்சூர் அலிகான் தொடங்கிய ‘டாப்சி’ அமைப்பின் தலைவர் பதவியை உதறினார் மன்சூர். தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ‘பெப்சி’ என்ற கூட்டமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தனர். பெப்சி அமைப்பினரின் ஆதரவு இல்லாமல் எந்த பெரிய நடிகரின் படமும் படபிடிப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இதன் மூலம் சிறு பட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர் மன்சூர் அலிகான் ‘அதிரடி’ என்ற படத்தை தொடங்கினார். அப்போது ‘பெப்சி’ தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மன்சூர் அலிகான் தலைமையில் ‘டாப்சி’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் உறுப்பினகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென ஒரு அறிக்...