சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

politics

போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாலை பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கமிட்டியானது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை செயலாளருடன் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி விவாதித்தது. அப்போது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பதற்காக ‘சாரதி-4’ என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக இணை செயலாளர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஓட்டுனர் உரிமங்களுடனும் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ‘மென்பொருள்’ (சாப்ட்வேர்) ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கையால் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், யாராலும் போலி ஓட்டுனர் உரிமம் தயாரிக்க முடியாது என்றும் விவ...
சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலன கோவில்கள் சுயநலத்திற்காகவே அமைக்கப்படுகிறது – சென்னை உயர் நீதிமன்றம்

சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலன கோவில்கள் சுயநலத்திற்காகவே அமைக்கப்படுகிறது – சென்னை உயர் நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என எந்த கடவுளும் கேட்பதில்லை எனத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற அமர்வு, ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்க உத்தரவிட்டது. சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோட்டை பாளையத்தம்மன் கோவிலை காலி செய்து இடத்தை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாட்சியரும் நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து கோவில் பூசாரி குருசாமி என்கிற அப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோவிலை 50 வருடமாக பராமரித்து வரும் கோவிலை அகற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ். வைத்தியநாதன் அம...
ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க ரூ.1 கோடி நிதியுதவி

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க ரூ.1 கோடி நிதியுதவி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பழமையான மொழிகளுக்கு இருக்கை உள்ளது. இதில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 42 கோடி ரூபாயில் 21 கோடி ரூபாயை பல்வேறு தமிழ் அமைப்புகள் வழங்கின. தமிழக அரசு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தனர். இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ் இருக்கைக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செயல் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நிதியுதவியானது தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் போராடும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழங்கப்படும். தமிழுக்கு கிடைக்க போகும் ஹார்வர்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “உயர் நீதிமன்றம், மத்திய அரசின் அலுவலகங்களில் நிச்சயம் ஒர...
‘snake’ removed from the Rajini’s logo..!

‘snake’ removed from the Rajini’s logo..!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
This comes weeks after a lotus was removed from under the logo. Observers say both changes are linked to Rajini’s desire to not alienate non-Hindus. It’s been just over a month since Rajinikanth announced his political entry, and already, his symbol has undergone two very conspicuous changes. The Rajini Makkal Mandram logo – which has a hand in the centre in what is widely recognised as the ‘Baba’ symbol – used to have a snake around it. In its most recent avatar, it has been take out. The note, unlike previous communication from the body, did not feature the snake which previously encircled the Baba hand symbol. This change comes weeks after another symbol in the logo – a lotus – was removed. Observers say that both changes are linked to the actor-turned-politician’s desire to...
சந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?

சந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31-ஆம் தேதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை காண அங்கு குவிந்த ஏராளமான மக்கள் சந்திர கிரகணத்தை கண்டுமகிழ்ந்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது. அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சிகள் நடந்த தருணத்தில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்ம பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது. அந்த பொருள் என்னவென்று தெரியவில்லை. மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே ...
அறிஞர் அண்ணா… தமிழர்களின் சுயமரியாதை, தனித்தன்மையைக் காத்த தலைவர்! – எம் நடராஜன்

அறிஞர் அண்ணா… தமிழர்களின் சுயமரியாதை, தனித்தன்மையைக் காத்த தலைவர்! – எம் நடராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அறிஞர் அண்ணா... தமிழர்களின் சுயமரியாதை, தனித்தன்மையைக் காத்த தலைவர்! - எம் நடராஜன்  தமிழகத்தின் வரலாற்று நாயகன் அண்ணாவின் 40வது நினைவு நாள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் அண்ணாவுக்கு தங்கள் மரியாதையைச் செலுத்தினார்கள். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் எம் நடராஜனும் அண்ணாவுக்கு தன் அஞ்சலியைச் செலுத்தினார். அண்மையில்தான் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் நடராஜன். உடல் நிலை சரியில்லாத நிலையில், வெளியில் செல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அண்ணாவுக்கு தன் அஞ்சலியை அவர் வீட்டிலேயே செலுத்தினார். அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து தன் மரியாதையை செலுத்திய நடராஜன், "தமிழகத்தின் வரலாற்று நாயகன் அண்ணா. தமிழகத்தின் சரித்திரம் அண்ணாவுக்கு முன், பின் என்றுதான் எழுதப்படும். தமிழர்களின் சுயமரியாதை, தமிழகத்தின் தனித்தன்மையைக் காப்ப...
ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு

ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபான கடைகளை நடத்தி வருகிறது. 2016-ல் 7 ஆயிரத்து 100 மதுபான கடைகள் இருந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளுமே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தன. இதற்கிடையில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் 3,320 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக் கடைகளின் எண்ணிக்கை 2,830 ஆக குறைந்தது. பின்னர் மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகளின் பெயர்மாற்றம் நடந்தது. மேலும் நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் பற்றி சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்தது. இதையடுத்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது 5 ஆயிரம் மதுக்கடைகள் உள்ளன. படிப்படியாக மதுவில...
ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!

ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல்கட்டமாக மாநில அளவில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நேற்று நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் மூலம் அதிக எண்ணிக்கையில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். எனவே பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி ரசிகர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். மகளிர் அணி அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இளைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் ...
ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்: கடும் எதிர்ப்பை அடுத்து முடிவை கைவிட்டது மத்திய அரசு

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்: கடும் எதிர்ப்பை அடுத்து முடிவை கைவிட்டது மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் விமான நிலைய சோதனையின் போது பாஸ்போர்ட்டில் உள்ள மேக்னடிக் ரீடரை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும். எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை வெளியுறவுத்துறை நீக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. மேலும், குடியுறவு சோதனை (ECR) தேவை என்ற நிலையில் உள்ள பாஸ்போர்ட்களை ஆரஞ்சு நிரத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களை பாகுபாடு பார்த்து பிரிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். இந்நிலையில், பாஸ்போர்ட் கடைசி பக்கம் நீக்கம் ...
மோடி கருத்துக்கு எதிர்ப்பு… பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..!

மோடி கருத்துக்கு எதிர்ப்பு… பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி கருத்துக்கு எதிர்ப்பு... பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..! சமீபத்தில்  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடியிடம், ஒவோர் ஆண்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கடந்த 2013-ல் கொடுத்த வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "பக்கோடா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிப்பவர்கூட வேலைவாய்ப்பை பெற்றவர்தானே" என பதிலளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'கர்நாடகா ஃபார் எம்ப்ளாய்மென்ட்' (Karnataka for Employment) என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜக அலுவலகம் முன்னர் பக்கோடா கடை போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் நீல நிறையில் உடை அணிந்திருந்தனர். இந்த அமைப்பானது, வேலையில்லை என்றால் வாக்கு இல்லை என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அமைப்பின் தலைவர் முட்டுராஜ் கூறும்போது,...