விக்ரம் லேண்டரின் சாய்தள கதவு வழியாக பிரக்யான் ரோவர் இறங்கி நிலவில் தடம் பதிக்கும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. 41 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதை இஸ்ரோ நேரலை செய்தது.
இதனை பார்த்த ஒட்டு மொத்த இந்தியர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதன்மூலம் நிலவில் தடம் பதித்த 4வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியா, சூரிய ஒளியே படர்த நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் சொந்தமாக்கியது.
விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தரையிறங்கியதற்கு பிற...