வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

நிபுணன் மகிழ்ச்சியில் பிரசன்னா..!

நிபுணன் மகிழ்ச்சியில் பிரசன்னா..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இது போல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து  நடித்து வெற்றிகளை சுவைத்தவர் நடிகர் பிரசன்னா. Action king அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்துவரும் ஜூலை 28ஆம் தேதி வெளி வர உள்ள படம் "நிபுணன்". இது அர்ஜுனின் 150வது படமாகும். அர்ஜுன் மற்றும் பிரசன்னாவுடன் , வரலக்ஷ்மி  சுருதி ஹரிஹரன் மற்றும் வைபவ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'நிபுணன்' குறித்து பிரசன்னா பேசுகையில், ''இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் எனது  நீண்ட நாள் நண்பர். 'நிபுணன்' ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது. 'நிபுணன்' படத்தின் திரைக்கதையையும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்குனர் அமைத்...
‘விவேகம்’ பட ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” – அக்ஷரா ஹாசன்..!

‘விவேகம்’ பட ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” – அக்ஷரா ஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர்  தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு 'விவேகம்' படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய்  உருவாகியிருக்கும் 'விவேகம்' படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்...
அமெரிக்காவில் இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்”

அமெரிக்காவில் இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
இந்தியாவில் நடத்தபடுகின்ற ஹிப்-ஹாப் நடன போட்டிகளிலேயே, கடந்த 2012ம் ஆண்டு முதல் அஞ்சன் சிவக்குமார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வரும் “இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்” மிகவும் பிரபலமானது. இதன் முக்கிய அம்சம் யாதெனில் இதில் வெற்றி பெறுபவர்கள், அமெரிக்காவில் நடைபெறும் உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். கடந்த2015ம் ஆண்டு நடைபெற்ற உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கமும், லாஸ் வேகாஸில் 2016ம் ஆண்டில் நான்காவது இடமும், 2012ம் ஆண்டிலேயே இறுதி 8 போட்டியாளர்களில் இடம்பிடித்து சரித்திரம் படைத்துள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் எங்களுக்கு அளித்த உதவியும், ஆதரவும் மிகவும் நன்றியோடும் நெகிழ்ச்சியோடும் நினைவு கூறத்தக்கது. இந்த ஆண்டும் நடைபெறு உள்ள போட்டிகளில் கலந்து கொள்வது ச...
சிறு முதலீட்டு சினிமாவுக்கு முன்னுரிமை வேண்டும் இயக்குனர் வேண்டுகோள்…!

சிறு முதலீட்டு சினிமாவுக்கு முன்னுரிமை வேண்டும் இயக்குனர் வேண்டுகோள்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் படவிழாவில் கே பாக்யராஜ் பேச்சு ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இதன் போது படத்தின் நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி, படத்தின் விநியோகஸ்தர் ராகுல், கலைப்புலி எஸ் தாணு, கே பாக்யராஜ், கவிஞர் பிறைசூடன், இயக்குநரும் நடிகருமான ஈ ராம்தாஸ், தயாரிப்பாளரும...
சமுத்திரக்கனி நடிப்பில்  கோலி சோடா 2

சமுத்திரக்கனி நடிப்பில் கோலி சோடா 2

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
இரண்டாம் பாகங்கள் உருவாகும் சாத்தியம் அனைத்து வெற்றி படங்களுக்கும் அமைவதில்லை. 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற கோலி சோடாவின் கதை எல்லா மொழிகளிலும் படமாக்கக்கூடிய திறன் கொண்ட கதையாகும். இக்கதையம்சத்தில் இரண்டாம் பாகத்திற்கான திறனும் சாத்தியமும்  நிறைந்து இருந்தது. அது போலவே சமீபத்தில் 'கோலி சோடா 2' படத்தின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அறிவித்த நாளிலிருந்தே படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்துவருகிறது . இக்கதை நான்கு முதன்மை கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் என இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார். இப்பொழுது அந்த நான்கு கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில் , ''இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார். கோலி...
வைரமுத்து வரிகளில் கலாமுக்கு சலாம்…!

வைரமுத்து வரிகளில் கலாமுக்கு சலாம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் உருவாக்கியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குனர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ஆல்பம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். அப்துல் கலாம் காலம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூறப்பட வேண்டியவர். இந்த இசைத்தட்டை வெளியிட வேண்டிய அவசியம் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளத் தான். அவர் இறந்த போது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் ஒரு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின. அதில் எனக்கு பிடித்தது 19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அப்துல் கலாம்...
ரஜினியிடம் ஆசி பெற்ற ரூபாய் நாயகன்..!

ரஜினியிடம் ஆசி பெற்ற ரூபாய் நாயகன்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
எல்லோருக்கும் தெரிந்தவர்களாலும் எல்லாம் தெரிந்தவர்களாலும் தேர்வு செய்யப் படுபவர்கள் என்றுமே தோற்பதில்லை. அப்படித்தான் ரூபாய் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமான கிஷோர் ரவிச்சந்திரனும். பிரபுசாலமன் , எம்.அன்பழகன் என இரண்டு திறமையானவர்களின் கண்டுபிடிப்பு தான் கிஷோர் ரவிச்சந்திரன். ரூபாய் படம் பார்த்தவர்கள் அத்தனை பேருமே பாராட்டு மழை பொழிந்தது கிஷோரின் நடிப்பைப் பார்த்து தான்.. புதுமுகம் என்கிற எண்ணமே யாருக்குமே தோன்றாத மாதிரி யதார்த்தமான நடிப்பில் அசத்தி விட்டார்.   அவரை சந்தித்து சினிமா பிரவேசம் எப்படி என்று கேட்டோம்.. நான் சென்னையில் படித்து முடித்து விட்டு எம்.பி .ஏ படிப்பிற்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தேன்.. இங்கிருந்து லாரி ஓட்டிக் கொண்டு தேனி சென்றேன்.. தேனி மக்கள் பாஷையை கற்றுக் கொண்டேன். திரும்பி வந்து எங்களது குடும்ப நண்பரான சாட்டை எம்.அன்பழகன் வீட்டுக்க...
விஷால் வெளியிட்ட துளசி சினிமா நியூஸ்..!

விஷால் வெளியிட்ட துளசி சினிமா நியூஸ்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
நடிகர்விஷாலின் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியிட்டுவிழாவில் துளசிசினிமாநியூஸ்(2017--ஜனவரிமுதல் ,ஜூன்வரைவெளிவந்ததிரைப்படங்களின் புள்ளிவிபரம்) புத்தகம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், டைரக்டர்மிஸ்கின், நடிகை சிம்ரன், பி.ஆர்.ஓ யூனியன் தலைவர்டைமண்ட்பாபு, பி.ஆர்.ஓயூனியன் முன்னாள்தலைவர் நெல்லைசுந்தரராஜன். ஆகியோர் வெளியிட்டார்கள். அருகில்--- துளசிசினிமாநியூஸ புத்தகத்தின் ஆசிரியர்---வெளியிட்டாளர் , பி.ஆர்.ஓ..பெருதுளசிபழனிவேல்....
வைரமுத்து வரிகளில் ‘ கலாம் ஆன்தம்’

வைரமுத்து வரிகளில் ‘ கலாம் ஆன்தம்’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் ஐய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலியை முன்னிட்டு 'கலாம் ஆன்தம்' என்ற வீடியோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடலை 'கவிப்பேரரசு' வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க திரு.வசந்த் அவர்கள் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த 'கலாம் ஆன்தம்' ஐ 'மார்க் குரூப் ஆப் கம்பனிஸ்' ன் தலைவர் திரு.GRK ரெட்டி தயாரித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பாடலின் டியூன் மற்றும் படமாக்கப்பட்ட விடம் சிறப்பாக இருப்பதாயும் கூறப்படுகிறது. தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல் எனவும், இந்தியன் அறிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும்பொழுகு தான் மிகவும் நெகிழ்ந்து  ...
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: நடிகர்-நடிகைகளிடம் நாளை விசாரணை

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: நடிகர்-நடிகைகளிடம் நாளை விசாரணை

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
    போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட வழக்கில் தெலுங்கு நடிகர் - நடிகைகளிடம் நாளை முதல் விசாரணை நடத்தப்படுகிறது. ஐதராபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களுடன் தெலுங்கு நடிகர் - நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நந்து, தனிஷ், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரிஜெகனாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, கலை இயக்குனர் ஜின்னா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிறப்பு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நடிகர் - நடிகைகளிடம் விசாரணை நாளை தொடங்குகிறது. யார் - யார் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நேற்ற...