பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘2வது ஆட்டம்’. சரத்குமாரின் வித்தியாசமான நடிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இதன் முதல் போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது.
கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருகஅகும் காட்டுப்பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி மக்கள் வாழும் மசாய் மாரா கிராமத்தில் நடைபெற்ற முதல் தென்னிந்திய தமிழ் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’.
கென்யாவின் மாசாய் மாரா கிராம பழங்குடிகள் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் மிக பழமையான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை இன்றும் பாதுகாத்து வாழ்ந்து வருகிறார்கள். கால்நடைகளோடு தமிழர்களுக்கு எப்படி ஒரு நெருக்கமான உறவு இருக்கிறதோ அதேபோன்று அந்த பழங்குடி மக்களுக்கும் கால்நடைகளோடு நல்ல உறவோடு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் கால்நடைகளின் பங்கு மிக அதிகம் காணப்படுகிறது.
தமிழகத்தில் மெரீனாவில் இளைஞர்களால் நடைபெற்ற அறப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் தமிழர்களின் அடையாளமான காளைகளைப்போல மசாய் பழங்குடிகள் வைத்திருக்கிற காளைகளுக்கும் ஒரு தனித்துவமான...
நெடுஞ்சாலை' , ' 'அதே கண்கள் ' போன்ற படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ஜொலித்த நாயகி ஷிவதா நாயர். அருமையான, வித்யாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நுணுக்கத்தை நன்கு அறிந்திருக்கும் இவரது அடுத்த படம் ''கட்டம்''. முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கியுள்ள படம் 'கட்டம்'. இப்படத்தை 'icreatewonderfilms' சார்பில் சந்தியா ஜனா தயாரித்துள்ளார். புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் , ஷிவதாவோடு சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து ஷிவதா பேசுகையில்,'' கட்டம் ஒரு 'கர்மிக் திரில்லர்'.இது ரசிகர்களுக்கு முற்றிலும் புது வகையான சினிமா.சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவன் செய்யும் மாபெரும் தவறுக்காக, எதிர்பாராத நேரத்தில், முற்றிலும் எதிர்பாராத வகையில் அவன் விதியெனும் 'கர்மா' வால் பழிவாங்கப்படுவதே 'கர்மிக் திரில்லர்'. இதுவே 'கட்டம்' படத்தின் சாராம...
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது.
"என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும்,நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம். நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது என்கிறது என்று தான் சொல்லுவேன். நான் சார்ந்து இருக்கும் திரை உலகிகின் சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்பிமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இதை போலவே இன்று விருதுகள் கிடைக்க பெற்ற ஏனைய திரை உலகினருக்கும் என் வாழ்த்துக்கள். சவால்கள்...
தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
2009 - 2014 வரை வெளிவந்த படங்களில் சிறந்த படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் குறித்த முழு விபரங்கள் பின்வருமாறு:-
2004-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு - பசங்க
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார்
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு
4 சிறந்த நடிகர் - கரண் (மலையன்)
5 சிறந்த நடிகை - பத்மப்ரியா (பொக்கிஷம்)
6 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)
7 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அஞ்சலி (அங்காடித் தெரு)
8 சிறந்த வில்லன் நடிகர் -...
‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படக்குழுவினர், விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தனர். இதை மக்கள் பலரும் வரவேற்றனர்.
இது குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு ‘தப்பாட்டம்’ படக்குழுவினரைப் பாராட்டி, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் ரயில் நிலையத்தில் பல்வேறு விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயக் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா 25000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பணத்தை தேச...
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால்
இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.
கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில் விஜய்சேதுபதி சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட உள்ளது.
இதுவரை விஜய்சே...
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "88" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார்
பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன்,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் எம்.மதன்.
இன்று விஞ்ஞானம் றெக்க கட்டிப் பறக்கிறது.
பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்..
ஜுலை மாதம...
ஆன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரிப்பில் G.முரளி இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "சவரிக்காடு "
இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள்.
கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள்.
மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்M.N.கிருஷ்ணகுமார்.
இது புது மாதிரியான திரைக்கதையம் கொண்ட படம் .முழுக்க முழுக்க காட்டை மையப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் இது..நண்பர்களைப் பற்றியும் நட்பைப் பற்றியும் உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக சவரிக்காடு உருவாகி உள்ளது.
படம் இமாதம் 21 ம் தேதி உலக முழுவதும் வெளியாகிறது....