புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

“எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு

 

“எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு

நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.
இந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியாயின.
நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.
தற்போது மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் உருவாகிறது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படம் தான் தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் டிரைலர் ரஜினியின் 2.0 வோடு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.
விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன.
இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது. இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
374 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன