சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ஜூலை 12ம் தேதி பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்..!

பெட்ரோல் பம்ப்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை ஏற்படுத்தாத பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, ஜூலை, 12ம் தேதி பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

இது குறித்து அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யப்படும் என்ற முடிவுக்கு நாங்கள் துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இதில் வெளிப்படைதன்மை இல்லை என்பது எங்களின் எண்ணமாக உள்ளது.மேலும், தானியங்கி தொழில்நுட்ப வசதி, 100 சதவீத பெட்ரோல் பங்க்குகளிலும் பொருத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன. அதை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, ஜூலை, 5ம் தேதி பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதில்லை என்றும், ஜூலை, 12ம் தேதி நாடு முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்றும் முடிவு செய்துள்ளோம்.

262 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன