புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

 

மாதவனுடன் கை கோர்த்த டைடானிக் நடிகர்..!

கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் நம்பி நாராயண் ராக்கெட்ரி படத்தில் மாதவன் நடித்து வருகிறார்.

இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயணன்.

இவர், 1994-ல் இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மிக பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு 1996-ல் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடைசியாக 1998-ல் வந்த தீர்ப்பின் படி நம்பி நாராயணன் ஒரு குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்த நீதிமன்றம், அதில் வெற்றி பெற்ற அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.

நம்பி நாராயணன் தனக்கு நடந்த சம்பவங்களை ‘ரெடி டூ பையர்: How India and I survived the ISRO spy case’ என புத்தகமாகவும் எழுதியுள்ளார் நம்பி. பின்னாளில் இந்த சர்ச்சைக்குரிய கதையை படமாக்க ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார் என்ற பேச்சு போய் கொண்டிருந்தது. இதற்கிடையே சில காரணங்களால் நடிகர் மாதவனே இப்படத்தை முழுவதும் இயக்கி வருகிறார்.

985 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன