சனிக்கிழமை, மே 2
Shadow

டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

 

 

டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

டெல்லியில் நிருபராக பணியாற்றி வரும் மிதாலி சண்டோலா என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது காரில் நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் அவரது கார் சென்றபோது ஒரு வாகனம் அவரது காரை முந்திச்சென்று நின்றது.

அந்த வாகனத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிதாலியின் கார் மீது முட்டைகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கியால் மிதாலியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் விரைந்துவந்தனர்.

தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்தது. படு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு மிதாலியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாராளுமன்றம் நடை பெறும் நேரம் ஒரு பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் பாஜக அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

478 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன