வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்; நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம்!

 

 

மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்; நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம்

சென்னையில் 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரத்தால் இயங்கும் ஃப்ளை (FLYY) என்ற இ-பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. மக்களுக்கு தேவையான பல புதிய திட்டங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கிண்டி, ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயக்கும் ஃப்ளை (FLYY) என்ற இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ.5 செலுத்தி புக்கிங் செய்துவிட்டு, ஒரு நிமிடத்துக்கு ரூ.1 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தி ஒரு நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நாம் எடுத்துச் செல்லலாம். சாவி இல்லாத இந்த இ-பைக், மொபைல் செயலி மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளலாம். வாகனத்தை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ள சூழலில் நிமிடத்துக்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

281 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன