சீனாவில் திடீரென கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் நகரமே முடங்கியது. போக்குவரத்து விமான சேவை அனைத்தும் முடங்கியது. நகரில் இருந்து யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
அதே போல நகருக்குள் யாரும் நுழையவும் அனுமதிக்கப் படவில்லை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சோதனை செய்து அதன் பிறகே அனுப்பப்படுகின்றனர்.
விமான நிலைய சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி இந்திய விமான நிலைய ஆணையம் இச்சோதனையை செய்துள்ளது.
348 Views