
தமிழகத்தில் வவ்வால்கள் மூலம் கொரானா வைரஸ் எதுவும் பரவாது – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் காரணமாக பல லட்சம் மக்கள் பலியாகி உள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
இந்த கொடூர வைரஸ் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் இருந்து வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல் வெளியானது.
அதுபோன்ற வவ்வால்கள் தமிழகத்தில் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானதால் கடும் பீதி நிலவியது.
இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர் என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளது தமிழக மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
அதோடு , இந்த வகை வவ்வால்களில் உள்ள வைரஸ் மனிதர்களுக்கு பரவாது என்பது கூடுதல் நிம்மதி.
527 Views
