
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரெயில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த சூழலில் மே 3ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பல சேவைகள் மீண்டும் தொடங்க தயார் ஆகி வருகிறது.
இந்நிலையில், மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மே மாதம் 4-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.
இதேபோல், ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெரிவித்துள்ளது.
அதே நேரம் சென்னை, டில்லி, மும்பை, கொல்கத்தா உட்பட மிக முக்கியமான பகுதிகளுக்கு மட்டும் முதற்கட்ட உள் நாட்டு விமான சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
