திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

5ம் கட்டமாக ஜூன் 30வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

 

 

5ம் கட்டமாக ஜூன் 30வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

கொரானாவை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் உள்ள நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து பொது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 4-வது கட்ட பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் 5-வது கட்ட நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரைக்கும், ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரைக்கும், மே 4-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரைக்கும், அதன்பின் மே 31-ந்தேதி வரைக்கும் என நான்கு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

332 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன