சனிக்கிழமை, மே 2
Shadow

வைரஸ் பாதிப்பில் இறந்தவர் உடலை டிராக்டரில் எடுத்து சென்ற டாக்டரின் மனித நேயம்!

 

 

மீண்டும் ஒரு மருத்துவரின் மனித நேயம்!

தெலுங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக ஸ்ரீராம் என்பவர் இருந்து வருகிறார்.  அவர், கொரானா பரவல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாகவும் உள்ளார்.  இந்நிலையில், கொரானா பாதித்ததில் உயிரிழந்த ஒருவரது உடலை சவக்குழிக்கு எடுத்து செல்ல வேண்டியிருந்தது.  ஆனால், சில காரணங்களுக்காக மாவட்ட நகராட்சி வாகன ஓட்டுனர் வர மறுத்துள்ளார்.

இதனால் நோயாளியின் உறவினர்கள் என்ன செய்வது என தெரியாமல் அவதிப்பட்டனர்.  தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.  இதனால் உடலை எடுத்து செல்ல டாக்டர் முன்வந்துள்ளார்.  இதன்படி, தனிநபர் பாதுகாப்பு உபகரணம் அணிந்து கொண்டு டிராக்டர் ஒன்றில் உடலை ஏற்றி அதனை அவரே சவக்குழிக்கு ஓட்டி சென்றார்.

கொரானா நோயாளியின் உடலை எடுத்து செல்ல பலரும் தயக்கம் காட்டி வரும் சூழலில், தெலுங்கானாவில் டாக்டர் ஒருவர் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக செயல்பட்டது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.  அவருக்கு தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் தனது பாராட்டுகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

355 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன