
சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரையும் கொடூரமாக போலீசார் அடித்து கொன்ற வழக்கு இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸ் வழக்கின் அனைத்து ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
விசாரணை வேட்டையில் இறங்கிய சிபிஐ சந்தேகமரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியது. மேலும், சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷை ஏ1 குற்றவாளியாக அறிவித்துள்ளது. அதோடு முக்கிய சர்ச்சை இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்ரீதர் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொலை வழக்காக மாற்றியதோடு ஏ1, ஏ2 என குற்றவாளிகள் விவரத்தையும் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
549 Views
