செவ்வாய்க்கிழமை, மார்ச் 19
Shadow

நர்ஸ், மருத்துவ பணியாளர்களுடன் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்! .

 

நர்ஸ், மருத்துவ பணியாளர்களுடன் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடியஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்! .
ரக்‌ஷாபந்தன் விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
நர்சுகளுடனான கலந்துரையாடலின்போது, அவர்கள் ஜனாதிபதி கையில் ராக்கி கயிறு கட்டி, வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை பணியில் தங்களது அனுபவங்களை நர்சுகள் ஒவ்வொருவரும் எடுத்துரைத்தனர். அதை பொறுமையாக கேட்ட ஜனாதிபதி, அவர்களது சேவையை பாராட்டினார். நர்சுகளை ‘மீட்பர்’ என்று வர்ணித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், மக்கள் உயிரை காப்பாற்றி வரும் ஒட்டுமொத்த நர்ஸ் சமுதாயத்தையும் வாழ்த்துகிறேன். இந்த கடமை உணர்வுதான் அவர்களுக்கு மரியாதை பெற்றுத் தருகிறது” என்றார்.
197 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன