
தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. பின்னர் மெளனகுரு, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார்.

இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இனியாவின் இந்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா?
317 Views
