
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மே 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா தொற்று சமீப நாட்களாக வேகமெடுக்க தொடங்கியது. கடந்த மார்ச் 16ம் தேதி புதுவையில் 24 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் மார்ச் 17ம் தேதி 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் நேற்று அதிரடியாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமீப நாட்களில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு சுகாதாரத்துறை நேற்று பரிந்துரைத்தது.
313 Views
