
மத்திய பிரதேசத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதன் எதிரொலியாக அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் 3 நகரங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை அனுமதிக்க வேண்டாம் என்று மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிரடியாக லாக்டவுன் அறிவித்துள்ளார் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்.
அதன்படி மத்திய பிரதேச தலைநகர் போபால், இந்தூர் மற்றும் ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாட்களுக்கு முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
