செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

இன்னொரு முகமா காட்டித்தான் பாரேன்? அண்ணாமலையை கடுப்பேத்திய கனிமொழி MP

 

 

பாஜக வேட்பாளரான அண்ணாமலை பிரச்சாரத்தின்போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கிப் பேசிய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த திமுக எம்பி.கனிமொழி.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.ஒவ்வொரு கட்சியினரும் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் நிலவி வருகிறது இரண்டு கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து கொள்கின்றனர்.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.அதில் பேசிய அவர் செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சென பல் எல்லாம் காணமா போயிடும் திமுக காரன்களை எச்சரிக்கிறேன் என்று கூறி.மேலும் எனக்கு இன்னொரு முகம் இருக்கு கர்நாடக முகம் அத தமிழ்நாட்டில் காட்ட வேணானு பாக்குறேன் என்று பேசியுள்ளார்.

இந்த பேச்சை கண்டிக்கும் வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எம்.பி கனிமொழிி, “அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை எனக்கு இன்னொரு முகம் இருக்குனு சொல்லுறாரு செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி. திமுகவை யாரும் மிரட்டவும் முடியாது அச்சுறுத்தவும் முடியாது, திமுக எழுந்தால் யாரும் தாங்கமுடியாது என்று கூறி அண்ணாமலையை எச்சரித்தார்.மேலும் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை பாஜகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்  குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தார்.

207 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன