சனிக்கிழமை, மே 2
Shadow

விமான நிலையத்தின் நிலை… ராஜமவுலி வேதனை!

விமான நிலையத்தின் நிலை… ராஜமவுலி வேதனை!

பாகுபலி படம் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்துக்குச் சென்ற இயக்குனர் ராஜமவுலி, அங்குள்ள நிலையைப் பார்த்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையாக பதிவு செய்திருக்கிறார்.

அதில், “அன்புள்ள டெல்லி விமானநிலையம், நான் லுஃப்தான்ஸா விமானம் மூலம் நள்ளிரவு 1 மணிக்கு வந்தேன். கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கான விண்ணப்ப படிவங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்து கொண்டும், சுவற்றில் வைத்தும் படிவங்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. அவர்களுக்கு மேஜைகள் வழங்குவது என்பது ஒரு சாதாரண சேவை.
அதுமட்டுமின்றி ஏராளமான தெரு நாய்கள் வெளியேறும் வாயிலுக்கு அருகில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன். நிச்சயமாக வெளிநாட்டவர்களுக்கு இது நல்லவிதமான பார்வையைத் தராது. இதைக் கவனத்தில் கொள்ளவும். நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.
357 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன