வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: ராஜமவுலி

ராஜமவுலி இயக்கத்தில் கமல்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ராஜமவுலி இயக்கத்தில் கமல்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.' போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்-நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். 'பாகுபலி'யில் நடித்த பிறகே பிரபாசின் திரையுலக மார்க்கெட் உயர்ந்தது. 'ஆர்.ஆர்.ஆர்.' படம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்துள்ளது. தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர் மேன் கதை சாயலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனும், ராஜமவுலியும் சந்தித்தனர். அப்போது இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை. தற்ப...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா பட்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா பட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட் பலர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்ததால் இப்படம் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட்டின் கதாப்பாத்திரம் பெரும் அளவிற்கு பேசப்படும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர், ஆனால் ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஆலியா பட்டுடைய கதாப்பாத்திரம் சில இடங்களில் மட்டுமே இடம்பெற்றதது. இதனால் அதிருப்தியடைந்த ஆலியா பட், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான பகிர்ந்திருந்த அனைத்...
ரூ.500 கோடி வசூல் ஆர்.ஆர்.ஆர். படைத்த புதிய சாதனை!

ரூ.500 கோடி வசூல் ஆர்.ஆர்.ஆர். படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட் பலர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ந்தேதி வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. இதுபற்றி திரைப்பட விமர்சகர் ஒருவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் புதிய சாதனையை படைத்து இருக்கிறது. ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது(தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது). இந்திய திரைப்பட புகழை எஸ்.எஸ். ராஜமவுலி மீண்டும் கொண்டு வந்துள்ளார் என தெரிவித்து உள்ளார். அதனுடன், குறிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில், விடுமுறை அல்லாத நாளில் மற்றும் கொரோனா காலத்தில் திரைப்படம் வெளியாகி உள்ளது என தெரிவித்து உள்ளார். இதுதவிர, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெ...
படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!

படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு! இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதில் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை தேடி வந்த ராஜமவுலி, இறுதியாக உக்ரைனில் படமாக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில...
விமான நிலையத்தின் நிலை… ராஜமவுலி வேதனை!

விமான நிலையத்தின் நிலை… ராஜமவுலி வேதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விமான நிலையத்தின் நிலை... ராஜமவுலி வேதனை! பாகுபலி படம் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்துக்குச் சென்ற இயக்குனர் ராஜமவுலி, அங்குள்ள நிலையைப் பார்த்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையாக பதிவு செய்திருக்கிறார். அதில், "அன்புள்ள டெல்லி விமானநிலையம், நான் லுஃப்தான்ஸா விமானம் மூலம் நள்ளிரவு 1 மணிக்கு வந்தேன். கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கான விண்ணப்ப படிவங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்து கொண்டும், சுவற்றில் வைத்தும் படிவங்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. அவர்களுக்கு மேஜைகள் வழங்குவது என்பது ஒரு சாதாரண சேவை. அதுமட்டுமின்றி ஏராளமான தெரு நாய்கள் வெளியேறும் வாயிலுக்கு அருகில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன். ...
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்! பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை ராஜமவுலி வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா நடிப்பதா...
ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ 

ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள்
ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2017-ல் வெளியான பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். இதனை திரை...
ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..! சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் காப்பான் படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். லைகா தயாரிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும் மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ள நிலையில் காப்பான் படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்புக்கு பந்தோபஸ்த் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டார். ஏற்கனவே நீ...
ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!

ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..! நடிகர் சூர்யா ‘என்ஜிகே ‘ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளிவந்த காப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை சாய்ஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு அறிவிப்பை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி நாளை ஜூன் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்

அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள் அனுஷ்கா 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய ஒரு காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இப்போது , இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா. ராஜமவுலியின் பிரமாண்டமான படமான பாகுபலியில் அனுஷ்கா உட்பட அதில் நடித்த அனைவருக்கும் பெரும் பேரும் புகழும் கிடைத்தது....