திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக ரீ-என்ட்ரி!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக ரீ-என்ட்ரி!

ரஜினிகாந்தின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார். 3 படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், சுருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமானது. ‘வை ராஜா வை’ படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யா படங்கள் இயக்காமல் ஒதுங்கினார்.
இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகவில்லை. ஐஸ்வர்யா இதற்கு முன்னர் இயக்கிய இரண்டு படங்களிலும் தனுஷ் நடித்திருந்தார். ஆதலால் இப்படத்திலும் தனுஷ் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
141 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன