ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா!
இந்தியாவில் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பின் தாக்கம் தீவிரமாக இருந்தது.
நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது, கடந்த ஒரு வார காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.
இந்தமுறை அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் திரிஷா, சத்யராஜ், மீனா, பிரபல தெலுகு நடிகர் மகேஷ் பாபு, மலையாள பட இயக்குநர் பிரயதர்ஷன் உள்ளிட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
...