செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அருண் விஜய்!

தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அருண் விஜய்!

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண்குமார், 1995-ல் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், முன்னணி நாயகனாக உயர முடியாமல் போராடி வந்தார். இதையடுத்து அவர் தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.
அதன்பிறகு அவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமையத் தொடங்கின. குறிப்பாக, கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின், அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது. தொடர்ந்து அவர் நடித்த ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.
தற்போது அக்னிச்சிறகுகள், பார்டர், வா டீல், பாக்ஸர், சினம், யானை, ஓ மை டாக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள அருண்விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல இயக்குனர் சுசீந்திரன் உடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுசீந்திரன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா என பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக அழகர்சாமியின் குதிரை படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
140 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன