வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஆட்சியில் இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. உயர்நீதிமன்றம் மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்கு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? உள்ளிட்ட ஆறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
347 Views

