
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு
தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக நீதிமன்ற உத்தரவுப்படி,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மிலானி என்பவர் தொடுத்த வழக்கில் தேனி மாவட்ட நீதிமன்றம் கடந்த 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்த உத்தரவிட்டிருந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
607 Views
