
இந்திய விமான சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஏர் டெக்கான். 2003 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 1 ரூபாய் டிக்கெட் என நிறைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வேகமாக வளர்ந்து வந்தது.

இருப்பினும், ஏர் டெக்கான் விமான நிறுவனம் பல்வேறு காரணங்களால் திடீரென நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக 2008ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை கிங்ஃபிஷர் நிறுவனம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டது. தொடர்ந்து 2012ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனியாக செயல்பட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த விலையில் பயண கட்டணம் நிர்ணயிக்கும் ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் ஒரு ரூபாயில் டிக்கெட் விற்க போவதாக அறிவித்திருக்கிறது. அதன்படி முதலில் பயணம் செய்யும் ஒருசில அதிர்ஷ்டசாலி பயணிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இன்னும் சில முக்கியமான எதிர்கால திட்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுள்ளது.
462 Views
