செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று – சி.என்.இராமமூர்த்தி பாராட்டு

திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று – சி.என்.இராமமூர்த்தி பாராட்டு

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி

முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று என அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில்

நாம் ஆதரித்த திமுக கூட்டணிக்கு தமிழகம் முழுதும் மக்கள் பெருவாரியாக ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ள வாக்காளப் பொதுமக்களுக்கும் திமுக
கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த வெற்றியாளர்களுக்கும் எனது எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணியைக் கட்டுக்கோப்பாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி இந்த மாபெரும் வெற்றியைச் சாதித்துக் காட்டியுள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகத்தான வெற்றி தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்பதையே உணர்த்துகிறது.

திமுக ஆட்சிக்கு எதிராக எதிக்கட்சிகள் பரப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மக்கள் புறந்தள்ளிவிட்டு திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

இந்த வெற்றியின் மூலமாக மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நல்லாட்சி நிர்வாகம் விரிவடையவும் வலுவடையவும் இந்த வெற்றி ஒரு படிக்கல்லாக அமையும்.

திமுக கூட்டணி வேட்பாளரளின் வெற்றிக்கு தமிழகம் முழுதும் பிரதிபலன் பாராமல் அந்தந்த பகுதிகளில் பணியாற்றிய வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் மா நில மாவட்ட வட்ட நிர்வாகிகள் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த  வாழ்த்துகள்.

இவ்வாறு அறிக்கையில் சி.என்.இராமமூர்த்தி கூறியுள்ளார்.

246 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன