வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 95 சதவீதம் ஏரி, குளங்கள் நிரம்பின!

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக கல்லணை கால்வாய் பகுதியில் மட்டும் 694 ஏரி, குளங்கள் உள்ளன.

இந்த ஏரி, குளங்கள் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு நிரம்பக்கூடிய ஏரி, குளங்களாகும்.

அதன்படி முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும். தற்போது அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் அந்த தண்ணீரைக் கொண்டு ஏரி, குளங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது.

அதன்படி கல்லணைக் கால்வாயில் உள்ள 694 ஏரி, குளங்களில் 681 ஏரி, குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன. மீதமுள்ள 13 ஏரி, குளங்கள் மட்டும் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

இதுதவிர டெல்டா மாவட்டங்களில் அந்தந்த உள்ளாட்சிக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

இந்த குளங்கள் மழைக்காலங்களில் மட்டும் நிரம்பக்கூடிய குளங்களாகும். அதாவது வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த குளங்கள் நிரம்பும்.

இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதன் பிறகு உள்ளாட்சி சொந்தமான குளங்கள் நிரப்பும்பணி நடைபெறும்.

246 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன