*வாட்ஸ் ஆப் தர்ணா*
*Day – 26*
*மரியாதைக்குரிய தயாரிப்பாளர்களே!*
*தயவு செய்து, மற்ற கலைஞர்களை போல டப்பிங் கலைஞர்கள் சம்பள பணத்தையும், அவர்களிடமே நேரடியாக கொடுங்கள்*
முகமது பின் துக்ளக் என்று ஒரு *கோமாளி* அரசன் இருந்தான்.
அவன் டப்பிங் சங்க தலைவனாக இருந்தால், தயாரிப்பாளர்கள் டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தை அவனிடம் கொடுப்பார்களா?
டப்பிங் சங்கத்தை பொருத்தவரை *ராதாரவிதான் துக்ளக்….*
குழந்தைகளையும் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பார்…
அதுவே சட்டப்படி குற்றம்…
அந்த குழந்தைகள் டப்பிங் பேசினாலும், 10% கட்டாயம் அவர்களிடமும் டப்பிங் புரோக்கர் கமிஷன் கொடு என்று மிரட்டி,
கையேந்தி, சங்க வளர்ச்சி என்ற பெயரில் *பிச்சை எடுக்க தயங்காதவர்* துக்ளக் ராதாரவி.
ஒருவேளை நன்றாக டப்பிங் பேசிய ஒரு குழந்தை உறுப்பினரை பாராட்டி,
ஒரு தயாரிப்பாளர், சம்பளத்தோடு லாலிபாப் ஒன்றை அந்த குழந்தைக்கு கொடுத்தால்,
அதில்கூட கொஞ்சம் கடித்துக் கொண்டு மீதியை தான் தருவேன் என்று அவர் பக்கித்தனம் செய்தாலும் ஆச்சரியம் இல்லை…
இவ்வளவு ஏன்? ஒரு குழந்தை *பிறந்த அதே ஆண்டிலேயே* அந்த குழந்தையை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து,
தொழிலாளர் நல ஆணையத்தில் நில நடுக்கம் வரவைத்த சாதனையாளர் துக்ளக் ராதாரவி.
பிறந்த குழந்தை பேசாதே பிறகு ஏன் சேர்த்தார்? என்று கேட்பீர்கள்.
அது தான் துக்ளக் ராதாரவி…
நிவாரண அரிசி மூட்டைகள் சங்கத்திற்கு வந்தால், முதலில் ராதாரவி வீட்டு கார் தான் சங்க வாசலில் வந்து நிற்கும்….
மூட்டை’கள்’ ஏற்றப்படும்….
வீட்டுகார் மட்டுமல்ல..
அவரது
வேலைக்கார்,
பால்கார் சமையல்கார்,
தோட்டக்கார்,
என் எல்லோரும் உறுப்பினர்கள் என வரிசை கட்டி நிற்பார்கள்…
பொதுக்குழு நடக்கும் போது மதிய உணவை எடுத்துச் செல்ல *பெரிய பெரிய கேரியர்* கொண்டு வந்துவிடுவார்.
பேரவை உணவு சுட சுட அவர் வீட்டிற்கு செல்வது கண்டு தலையில் அடித்துக் கொள்ளும் டப்பிங் கலைஞர்கள் ஏராளம்…
அமரர் இயற்கை ஜனநாதன் அவர்களது அறக்கட்டளை சார்பாக நடிகர் விஜய்சேதுபதி நலிந்த கலைஞர்களுக்காக தங்க நாணயம் கொடுத்தார்…
ஒரு பழைய சட்டையை அணிந்து கொண்டு போய், டப்பிங் சங்கத்தில் தான் தான் *நலிந்த கலைஞன்* என்று சொல்லி, அந்த தங்க காசையும் வாங்கிக் கொண்டாராம், துக்ளக் ராதாரவி…
இப்படி துக்ளக் ராதாரவி *பணத்திற்காக டப்பிங் சங்கத்தில் போடாத வேஷமில்லை.*
தயவு செய்து அந்த ஆளுக்கு சொல்லி புரிய வையுங்கள்.
இந்த ஈனமான கோமாளித்தனங்களை உறுப்பினர்கள் ரசிக்கவில்லை என்று..
போயும் போயும் இந்த மகா மட்டமான துக்ளக் ராதாரவியிடம் கொண்டு போய் எங்கள் சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்களை *நான் என்ன சொல்வது???*
இப்படி தினமும் ஒரு பதிவு வாட்ஸ் அப் குழுக்களில் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ராதாரவி தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.