செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

“ அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம் தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

 

 

 

 

 

“ அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம் தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

 

தயாரிப்பாளர் கேயார் பேசியதாவது:-

“இயக்குனர் ஆதிராஜன் என்னுடைய நீண்டநாள் நண்பர். நிறைய போராட்டத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படம் ஜெயிப்பதற்கான நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கிறது. ராஜா, புதுமுக நடிகர், தயாரிப்பாளர். ரொம்ப தைரியமாக இருக்கிறார். அது இருக்கவேண்டும்.

சில மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு பிரச்சினை இருக்கும். சிலர் எப்படியும் வாழலாம் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு பிரச்சினை இருக்கும். ஆதிராஜன் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பவர்.

அதனால்தான் அவர் பிரச்சினைகளை சந்தித்தார். இனி அவருக்கு அந்த இயற்கையே சப்போர்ட் பண்ணும்.

ராஜா போன்ற தயாரிப்பாளர்கள் கிடைப்பதும் கஷ்டம். நண்பர் அசோக் சாம்ராஜ் இந்தப் படத்தை வெளியிடுகிறார். படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காகவே தேசிய விருது கிடைக்கும். அவார்டு மட்டுமின்றி ரிவார்டும் கிடைக்கும்”என்றார்.

 

88 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன