சனிக்கிழமை, மே 30
Shadow

தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்..!

தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் தற்போது மேகக்கூட்டங்கள் நிலவுவதன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு உயர்ந்துள்ளது. காலநிலையானது குளிர் காலத்திலிருந்து கோடை காலத்தை நோக்கி மாறத் துவங்கியுள்ளதால் , சூரியன் விரைவாகவே உதித்து வருகிறது.

இதன் விளைவாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும்.

309 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன