சத்யஜித்ரே படம் போல இருக்கிறது” ; ஒரு குப்பை
சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கத்தில் ‘ஒரு குப்பைக்கதை’ படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட இந்தப்படத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர்
இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த வைகோ
இந்தப்படம் குறித்து மிகவும் சிலாகித்து, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்..
கதை’ படத்தை பார்க்க வேண்டும்.. இன்றைக்கு மணமுறிவுகள் ஏற்படுவது, கள்ளக்காதலில் மனைவி படுகொலை, கணவன் தலையில் மனைவி அம்மிக் குழவியை போட்டு
சொல்லியிருக்கிறார்கள்.. நம் சமூகத்தில், குடும்ப வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரை அணுகவிட வேண்டும்
அணுக விடக்கூடாது என்பதையும், கணவன் எவ்வளவு வசதியானவனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல சுற்றுப்புற சூழல் இல்லாவிட்டால் எவ்வளவு கஷ்டம் என்பதையும் அருமையாக காட்டியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை பார்த்ததும், இன்றைய சமூகத்தின் அவலங்களுக்கு மத்தியிலே வாழும் மக்கள் இந்தப்படத்தை கட்டாயம் பார்க்கவேண்டும் என நினைத்தேன்.. அந்த அளவுக்கு இதில் ஒரு மெசேஜ் இருக்கிறது. சமூகம் இருக்கும் இன்றைய சூழலில் இவ்வளவு நல்ல திரைப்படத்தை
இயக்குநர் காளி ரங்கசாமி எடுத்துள்ளார். இதில் நடித்தவர்களும் உண்மையிலேயே நடித்தது போலவே இல்லை. வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இதில் காட்டப்பட்டுள்ள பகுதியைபார்க்க என்னடா இப்படி இருக்கிறதே என சற்று அருவறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் வாழ்க்கை. இன்னொரு உலகம் இருக்கிறது. அது ஏழு நட்சத்திர ஹோட்டல் உலகம். அந்த உலகம் வேறு.. அந்த உலகத்தைபார்க்கிறோம்.. அந்த கட்டடங்களைபார்க்கிறோம். அந்த மக்களைபார்க்கிறோம்.. ஆனால் நரகத்தைபோல் ஆக்கப்பட்டுவிட்ட இந்த குப்பையிலும் சாக்கடையில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை இருக்கிறதே இது உண்மை. பிரபல இயக்குனர் சத்யஜித்ரே தனது படங்களில் இதுபோன்ற விஷயங்களை காட்டித்தான் பல விருதுகளை வாங்கினார்.
பாராட்டியுள்ளார் வைகோ.