திருப்பதியில் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு வினியோகம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகம் மற்றும் மலையில் கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்தது.
திருமலையில் உள்ள கடைகளில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
திருப்பதிக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் லட்டுகளை போட்டுத்தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டுகள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படும் என கூறினர்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா...