3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு!
3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு!
தமிழகத்தில் கொரோன தொற்றின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தொற்று நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
மேலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.
இருப்பினும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்கள...









