செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Uncategorized

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி உடைந்து மூழ்கியது!

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி உடைந்து மூழ்கியது!

Uncategorized
  பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்காத நிலையில் மீன்பிடி விசைப்படகு ஒன்று வடக்குப் பகுதியில் இருந்து தெற்கு பகுதி நோக்கி கடக்க முயன்றபோது விசைபடகின் மேல்பகுதி பாலத்தின் மீது மோதியது. பாம்பன் இரயில் தூக்கு பாலம் 11.02.2022 திறக்கப்பட்ட நிலையில் 50 -ற்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து மண்டபம் மீன்பிடி தளத்திற்கு சென்றன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் நேற்று மதியம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு ஒன்று பாலத்தை கடக்க முயன்றது. அப்போது படகின் மேற்பகுதி பாலத்தின் மீது மோதி பலத்த சேதம் ஏற்பட்டு படகு உடைந்து கடலில் முழ்கியது. அப்போது அங்கு மீன்பிடி படகுகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் படகு மூழ்கியதை கண்டதும் விரைந்து சென்று படகில் இருந்த மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். படகு முற்றிலும் ...
இணையத்தை கலக்கும் புஷ்பா மேக்கிங் வீடியோ!

இணையத்தை கலக்கும் புஷ்பா மேக்கிங் வீடியோ!

Uncategorized
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக மாறியது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இந்நிலையில் புஷ்பா கதாப்பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு, அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அனைவராலும் பாராட்டப்பட்ட புஷ்பா எப்படி உருவாகிறான் என்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது....
வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part4

வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part4

Uncategorized
    வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part 4     https://youtu.be/5kQPbffSoFs
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்!

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்!

Uncategorized
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்! டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ஜெய்பீம். 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழா 2022-இல் மூன்று விருதுகளை அள்ளி குத்துள்ளது. சிறந்த படத்திற்காக ஒரு விருதும், சிறந்த நடிகருகான ஒரு விருதை நடிகர் சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான ஒரு விருதை நடிகை லிஜிமோல் ஜோஸுக்கும் கிடைத்துள்ளது....
‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

Uncategorized
    சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட பதிவுகள் ஒரு சில மணி நேரங்களிலே பலரை சென்றடைந்து விடும். இதற்கு முக்கிய காரணம் அந்த பதிவின் தரமும், அதை வழங்கி இருக்கும் விதமும் தான். அந்த வகையில் சில வீடியோக்கள், படங்கள், மீம்ஸ் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சமீப காலமாக சிறிய அளவிலான பாடல் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.   https://www.instagram.com/reel/CYy1-rypgH3/?utm_source=ig_embed&ig_rid=622c8711-a2a3-4cd8-923a-1103c7003b9d   அதன்படி சில வாரங்களாக வைரலாகி வந்த ஒரு துள்ளலான பாடல் தான் 'ஊ அண்ட்டவா மாமா' என்கிற தெலுங்கு பாடல். இந்த பாடல் தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா போன்ற வேறு சில மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது. எல்லா மொழிகளிலும் அந்தந்த ரசிகர்களை அதிக அளவு இந்த பாடல் மக்களை கவ...
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கொரோனா!

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கொரோனா!

Uncategorized
    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி அவரவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில் பலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 250 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து வரக்கூடிய அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக...
வீரமே வாகை சூடும் அப்டேட்!

வீரமே வாகை சூடும் அப்டேட்!

Uncategorized
விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்   விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை ஜனவரி 19ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.   நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்....
பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்!

பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்!

Uncategorized
பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்! பஞ்சாப் அரசை கண்டித்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் நடத்திய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தின் போது, சாலை ஓர தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் மோடியை பற்றி காரசாரமாக விமர்சித்துப் பேசியதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வியாபாரி அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார். அங்கேயு பாஜகவினர் சிலர் புகுந்து அந்த வியாபாரியை சரமாரி தாக்கியதால் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. #தள்ளுவண்டிவியாபாரியைதாக்கியபாஜக   https://twitter.com/onlykodanki/status/1481694935405699073?s=20...
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

Uncategorized
  நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன.  முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது. தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்....
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு

Uncategorized
  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக நீதிமன்ற உத்தரவுப்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மிலானி என்பவர் தொடுத்த வழக்கில்  தேனி மாவட்ட நீதிமன்றம் கடந்த 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்த உத்தரவிட்டிருந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...