பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி உடைந்து மூழ்கியது!
பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்காத நிலையில் மீன்பிடி விசைப்படகு ஒன்று வடக்குப் பகுதியில் இருந்து தெற்கு பகுதி நோக்கி கடக்க முயன்றபோது விசைபடகின் மேல்பகுதி பாலத்தின் மீது மோதியது.
பாம்பன் இரயில் தூக்கு பாலம் 11.02.2022 திறக்கப்பட்ட நிலையில் 50 -ற்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து மண்டபம் மீன்பிடி தளத்திற்கு சென்றன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் நேற்று மதியம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு ஒன்று பாலத்தை கடக்க முயன்றது.
அப்போது படகின் மேற்பகுதி பாலத்தின் மீது மோதி பலத்த சேதம் ஏற்பட்டு படகு உடைந்து கடலில் முழ்கியது.
அப்போது அங்கு மீன்பிடி படகுகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் படகு மூழ்கியதை கண்டதும் விரைந்து சென்று படகில் இருந்த மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.
படகு முற்றிலும் ...