பாலியல், போதைபொருள் கடத்தல்… அதிர்ச்சியில் திரையுலகம்..! விசாரணை வளையத்தில் பிரபலங்கள்
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னணி நடிகர் - நடிகைகளுக்கு நோட்டீஸ்
திரையுலகினருக்கு இப்போது ஏழரை நடக்கிறது போலும்... மலையாள திரையுலகில் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் போதை பொருள் கும்பலோடு தொடர்பு என்று தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கு பட உலகில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கில் போதை கடத்தல் கும்பலோடு தொடர்பில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் நடிகைகள் பலர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்ப...