அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் “செட்டப்பா” ?
பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் எப்போதும் தூக்கிப் பிடித்து ஆதரவு கோஷம் போடும் முதல் நபர் அர்னாப் கோஸ்வாமி.
எதிர்க் கட்சியினரை எதிரி கட்சியாக பாவித்து தனது டிவியில் செய்தி வெளியிடுவது அர்னாப்பின் வழக்கம்.
நேற்றிரவு தான் இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களால் தாக்கப்பட்டதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டிய, நிலையில், இது அர்னாப் மீது அர்னாபே நடத்திய 'செட் அப்' தாக்குதல் என்று ரவி நாயர் என்ற பத்திரிகையாளர் சொல்லி இருப்பது சமூக வலைதளங்கங்களில் ட்ரெண்டிங்காகி வருது.
அர்னாப், அவரது மனைவி மற்றும் தொலைக்காட்சி ஆசிரியர் சாமியபிரதா ரே ஆகியோர் காரில் நேற்று இரவு தங்களின் ஸ்டுடியோவில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அர்ன...
