ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: ஏர் இந்தியா

45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு!

45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு -ஏர் இந்தியா அதிர்ச்சி தகவல்! ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணம் செய்த பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பத்து வருட வாடிக்கையாளர் தரவு கசிந்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: 2011 ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 2021 பிப்ரவரி 3-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளது. ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட பயணிகள் அமைப்பான சீடாவில் இருந்து வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்த தேதி, தொடர்பு தகவல் மற்றும் டிக்கெட் தகவல்களும் கசிந்துள்ளன. சீடா பிஎஸ்எஸ் பயணிகள் சேவை அமைப்பின் எங்கள் தரவு செயலி (பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை சே...
மே 4 முதல் மீண்டும் உள் நாட்டு விமான சேவை தொடங்கும் – ஏர் இந்தியா அறிவிப்பு

மே 4 முதல் மீண்டும் உள் நாட்டு விமான சேவை தொடங்கும் – ஏர் இந்தியா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரெயில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைத்துள்ளது. இந்த சூழலில் மே 3ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பல சேவைகள் மீண்டும் தொடங்க தயார் ஆகி வருகிறது. இந்நிலையில், மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மே மாதம் 4-ம் தேதி முதல்  குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். இதேபோல், ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெரிவித்துள்ளது. அதே நேரம் சென்னை, டில்லி, மும்பை, கொல்கத்தா உட்பட...
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் மத்திய  அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ பெரும் கடன் சுமையில் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான கடன் சுமையால் இந்த நிறுவனம் பயணிகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்குவதில் சிக்கல் உருவானது. இதேபோல், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பதாக அறிவித்தது. எனினும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டாததால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதும் விற்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதாவது இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக மத்திய முதலீ...