கந்த சஷ்டி சர்ச்சை விவகாரத்தில் வழக்கம் போல தாமதமாக அதே நேரம் ஆவேசமாக கருத்து சொன்ன ரஜினி!
கந்த சஷ்டி சர்ச்சை விவகாரத்தில் வழக்கம் போல தாமதமாக அதே நேரம் ஆவேசமாக கருத்து சொன்ன ரஜினி!
கருப்பர் கூட்டம் என்கிற யுடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை வீடியோ குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு, அந்த யூடியூப் சேனலின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கம் போல சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
அதில் எல்லாமதமும் சம்மதமே எனக் குறிப்பிட்டாலும் மிக ஆவேசமான வார்த்தைகளை ரஜினி பயன்படுத்தி உள்ளார்.
ஆன்மீக அரசியல் நடத்தப் போவதாக சொன்ன ரஜினி ஒரு மதம் சார்ந்த பிரச்சினை எழுந்து பல நாட்கள் கழித்து தன் கருத்தை வெளிப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
