Tag: கலவரத்தை தூண்டும் ஹெச்.ராஜா?
கமல் மீது செருப்பு வீசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தாரா ஹெச்.ராஜா… செருப்பு வீசியவரை வீட்டுக்கு அழைத்து பாராட்டியதால் சர்ச்சை
பிரச்சாரத்தின் போது கமல் மீது செருப்பு வீசிய நபரை வீட்டுக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி மகிழ்வித்துள்ளார் எச்.ராஜா.
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த எதிர்ப்பால் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் பிரச்சாரத்தை துவங்கினார்.
அப்போது பிரசார மேடையை நோக்கி காலணி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காலணி வீசியவர் பாஜகவை சேர்ந்தவர் என தெரியவந்தது.
இதனால், கமல் மீது காலணி வீசிய நபரை பாஜக தேசியச் செயலாளா் எச்.ராஜா தனது இல்லத்திற்கு அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்துள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த கேவலமான செயலை பார்க்கும் போது ராஜாதான் தூண்டி விட்டு கமல் மீது செருப்பு வீச சொல்லி இருக்கலாம் என்பது தெ...

