கொரானாவால் இந்தியாவில் மறையும் விளையாட்டாக மாறிய கிரிக்கெட் !
இந்தியாவில் மறையும் விளையாட்டாக மாறிய கிரிக்கெட் !
உலகளாவிய தொற்று நோய் கொரானா இந்தியாவுக்குள் நுழைந்த நேரத்தில் மத்திய அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது.
அதன் ஒரு பகுதி மக்கள் கூடும் எந்த நிகழ்ச்சியையும் அனுமதிப்பதில்லை என்பது.
நாடு முழுதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில்
இந்திய கிரிக்கெட் வாரியம் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசனை ஏப்ரல் 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.
காரணம் ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் என நம்பப்பட்டது.
ஆனால் ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் 2020 சீசனை மறு அறிவிப்பு வரும் வரை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.
அதே நேரம் கொரானா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடி வருகிறது. இருந்த போதும் வைரஸ் தொற்று எப்போது முடிவுக்க...
