ஆட்சி காலத்தில் செய்ததை பட்டியல் போட்டு சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா? – ஸ்டாலின் கேள்வி
ஆட்சி காலத்தில் இதை எல்லாம் செய்திருக்கிறோம் என்று பட்டியல் போட்டு சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா? - ஸ்டாலின் கேள்வி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் தேர்தல் நேரத்தில் மட்டும் வர மாட்டேன். எப்போதும் உங்கள் கூடவே இருப்பேன். உங்களுடைய சுக துக்க நிகழ்ச்சியில் உரிமையோடு கலந்து கொள்ளக்கூடியவன் என்பது உங்களுக்கு தெரியும்.
அந்த உரிமையுடன் உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். நான் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பெற்றிருப்பது உங்களுக்கு தெரியும். 13 வயதில் திருவாரூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயின்ற போதே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞரின் மகன்தான் நான்.
தி.மு.க.வின் சாதாரண தொண்டனாக 14 வயதில் என்னை இணைத்துக் கொண்டேன். இளைஞர் அணியை ஏற்படுத்தினேன். அதன்பிறகு வட்டபிரதிநி...
